< Back
மாநில செய்திகள்
பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி
திருவாரூர்
மாநில செய்திகள்

பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி

தினத்தந்தி
|
10 Aug 2022 3:42 PM GMT

பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதில் 1,250 டன் அரிசி தூத்துக்குடி மாவட்டத்திற்கும், 1,250 டன் அரிசி ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்