< Back
மாநில செய்திகள்
மாநில கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு திருச்சியில் 25 வீராங்கனைகள் தேர்வு
திருச்சி
மாநில செய்திகள்

மாநில கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு திருச்சியில் 25 வீராங்கனைகள் தேர்வு

தினத்தந்தி
|
20 May 2023 9:02 PM GMT

மாநில கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு திருச்சியில் 25 வீராங்கனைகள் தேர்வு நடந்தது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 13 முதல் 24 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மாநில அளவில் சென்னையில் பயிற்சி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் திருச்சி மாவட்டம் சார்பில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் தேர்வு திருச்சி சாரநாதன் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த தேர்வில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தேர்வுக்கு வந்திருந்த வீராங்கனைகளை பந்து வீசச்செய்தும், பேட்டிங் செய்ய வைத்தும், கீப்பிங் செய்ய வைத்தும் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர். முகாமின் முடிவில் 25 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்