< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு 2.35 லட்சம் பேர் விண்ணப்பம்: 6-ந் தேதி கடைசி நாள்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு 2.35 லட்சம் பேர் விண்ணப்பம்: 6-ந் தேதி கடைசி நாள்

தினத்தந்தி
|
3 Jun 2024 5:28 PM GMT

வருகிற 12-ந்தேதியன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, 13-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.

சென்னை,

2024-25-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 6-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று மாலை வரையிலான புள்ளி விவரங்களின்படி, 2 லட்சத்து 35 ஆயிரத்து 709 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பப் பதிவு செய்துள்ள 2 லட்சத்து 35 ஆயிரத்து 709 பேரில், 1 லட்சத்து 87 ஆயிரத்து 517 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 38 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பப் பதிவை நிறைவு செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வருகிற 6-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 12-ந்தேதியன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, 13-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. தரவரிசைப் பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்