< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
13 July 2022 4:36 PM GMT

செங்கல்பட்டில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருடப்பட்டது.

செங்கல்பட்டு அழகேசன் நகரை சேர்ந்தவர் எழிலன் (வயது 54). இவர் திருவள்ளுவர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை மதியம் எழிலன் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரியில் உள்ள தனது உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு ஞாயிறு மாலை 5 மணியளவில் தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் உள்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உடனடியாக செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருடர்கள் வீட்டின் முன் கதவுகளை உடைக்காமல் சாமர்த்தியமாக பக்கத்து வீட்டு மொட்டை மாடியின் படிக்கட்டு வழியாக இந்த வீட்டுக்குள் நுழைந்து சத்தம் கேட்காமல் இருக்க வீட்டின் இரும்பு கதவின் தாழ்ப்பாள் பகுதியை வளைத்து பின் உள் கதவின் அடிபகுதியில் கம்பி வைத்து உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களோடு சில தங்க நாணயங்களையும் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது போன்ற பல குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் துறை சார்பில கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்படும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்