< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
திருச்சி
மாநில செய்திகள்

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
19 Jun 2022 8:00 PM GMT

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மணப்பாறை:

மணப்பாறை தெற்கு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோமளாதேவி(வயது 28). இவர் சம்பவத்தன்று விராலிமலை சாலையில் நடந்து சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கோமளாதேவியின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். இதைக்கண்ட ஒரு ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்கள், அந்த 2 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, தப்பி ஓடிய நபரையும் போலீசார் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகை மாவட்டம், காடம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த விஜய் சவுகார்(28), திருச்சி மாஞ்சாம் கோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்