< Back
மாநில செய்திகள்
சாத்தூர் அருகே குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு...!
விருதுநகர்
மாநில செய்திகள்

சாத்தூர் அருகே குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு...!

தினத்தந்தி
|
23 May 2022 12:26 PM GMT

சாத்தூர் அருகே குடிநீர் வாகனம் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகுமாரவேல் (வயது 32).இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா (27), இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும்,2 வயதில் சோலைராஜ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில்,கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான குடிநீர் வாகனத்தை பால்பாண்டி (20) என்பவர் ஓட்டி வந்து குடிநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை சோலைராஜ் வீதியில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தை பின்னோக்கி இயக்கிய போது வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது வாகனம் ஏறியது.

இந்த விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிநீர் வாகனம் ஓட்டி வந்த பால்பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்