< Back
மாநில செய்திகள்
பாலப்பணியால் நாளை 2 ரெயில்கள் தாமதாக செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

பாலப்பணியால் நாளை 2 ரெயில்கள் தாமதாக செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
17 Jun 2022 2:28 PM GMT

பாலப்பணியால் நாளை 2 ரெயில்கள் தாமதாக செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தாழையுத்து-நெல்லை இடையே ரெயில்வே பாலத்தில் இரும்பு கர்டர் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 ரெயில்கள் தாமதாக செல்லும்.

திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரெயில் நாளை(18.06.2022) தாமதாக இரவு 10.15 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

திருவனந்தபுரம்-திருச்சி இண்டர்சிட்டி விரைவு ரெயில் நாளை 50 நிமிடம் தாமதமாக இரவு 8.35 மனிக்கு திருச்சி சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்