< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது- 19 மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர் பறிமுதல்
|2 Oct 2023 9:09 PM GMT
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
ரோந்து
மதுரை கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வைகை ஆற்று பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். போலீசார், அவர்களின் வாகனத்தை சோதனை செய்தபோது, அந்த வாகனத்திற்கான எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில், அவர்கள் 2 பேரும் இணைந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
பறிமுதல்
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் முத்துராஜ், ராமு மகன் ராஜபாண்டி என தெரியவந்தது.மேலும் அவர்களை கைது செய்து 19 மோட்டார் சைக்கிள்கள், ஒரு டிராக்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.