< Back
மாநில செய்திகள்
சாலை விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

சாலை விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
11 Dec 2022 6:58 PM GMT

சாலை விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

க.பரமத்தி அருகே பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் தென்னிலை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் க.பரமத்தி கடைவீதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். க.பரமத்தி பெரியார் நகர் அருகே வந்தபோது க.பரமத்தியை சேர்ந்த காசிராஜன் மகன் வினோத் (29) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேருக்கு மோதி கொண்டது. இதில் படுகாயம் அடைந்த முருகன் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், வினோத் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்