< Back
மாநில செய்திகள்

திருவள்ளூர்
மாநில செய்திகள்
மணல் கடத்திய 2 பேர் கைது

21 April 2023 2:41 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியே சந்தேகத்திற்கு இடமான ஒரு டிப்பர் லாரி வந்தது. அதை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் உரிய அனுமதி இன்றி ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான பரணம்பேடு கிராமத்தை சேர்ந்த தங்கபிரகாசம் (வயது 38), அல்லிப்பூகுளத்தை சேர்ந்த கிளீனரான நாகராஜ் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.