< Back
மாநில செய்திகள்
மதுக்கடையின் சுவரை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மதுக்கடையின் சுவரை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
18 Aug 2023 8:48 PM GMT

மதுக்கடையின் சுவரை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது

திருவோணம் அருகே மதுக்கடையின் சுவரை உடைத்து மதுபாட்டில்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுபாட்டில் திருட்டு

திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மதுக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு ஊழியர்கள் கடையினை பூட்டிவிட்டு அங்கியிருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு நள்ளிரவில் மதுக்கடையின் சுவரை உடைத்துக்கொண்டு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.82 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் வீரையன் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

மதுக்கடை சுவரை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருவோணத்தை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டையை சேர்ந்த நந்தக்குமார் (வயது55), இன்னான்விடுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் (28) ஆகிய இருவரும் சம்பவத்தன்று நள்ளிரவு தொடர்புடைய மதுக்கடையின் சுவரை உடைத்து கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நந்தக்குமார், வெற்றிச்செல்வன் ஆகிய 2 பேரையும் வாட்டாத்திக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்