< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து 2 பேர் சாவு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விஷம் குடித்து 2 பேர் சாவு

தினத்தந்தி
|
2 Sep 2023 6:45 PM GMT

விஷம் குடித்து 2 பேர் சாவு

திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி தென்பிடாகை மேலத்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 24). கூலித்தொழிலாளியான இவருக்க குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் காலை வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த தண்டபாணி அண்ணன் இளம்பரிதி உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தண்டபாணி உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சி சடையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி சந்திரா (65). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் சந்திரா வீட்டில் விஷத்தை குடித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சந்திரா உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்