< Back
மாநில செய்திகள்
தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
2 July 2023 6:52 PM GMT

முக்கூடல் அருகே தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கூடல்:

முக்கூடலைச் சேர்ந்த ராதாசிங் (வயது 70) என்பவருக்கு கீழபாப்பாக்குடி அருகே தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மின்மோட்டாரை கடந்த ஏப்ரல் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம், வழக்குபதிவு செய்து, பருத்திவாய்குளத்தை சேர்ந்த இசக்கி (37), நத்தன்தட்டையை சேர்ந்த கந்தசாமி (40) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்