< Back
மாநில செய்திகள்
தாமிர வயர்கள் திருடிய 2 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

தாமிர வயர்கள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
25 Aug 2022 8:31 PM GMT

தாமிர வயர்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்கலமலையை சேர்ந்தவர் சங்கர் (வயது 58). இவரது தோட்டத்தில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தாமிர வயர்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ் (33), கோபிநாத் (28) ஆகியோர் தாமிர வயர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்