< Back
மாநில செய்திகள்
சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தினத்தந்தி
|
10 Oct 2023 7:50 PM GMT

சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

துறையூர்:

துறையூரை அடுத்துள்ள கங்காணிப்பட்டி கிராமத்தில் சேவல் சண்டை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் அங்கு சென்றார். அப்போது அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட புலிவலம் பகுதியை சேர்ந்த நடுத்தெரு காலனியில் வசித்து வரும் ராஜா(வயது 28), துறையூர் மதுராபுரியை சேர்ந்த ஹரிஹரன்(21) ஆகியோரை கைது செய்து, 2 சேவல்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்