< Back
மாநில செய்திகள்
நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 2 பேர் சிறையில் அடைப்பு
திருச்சி
மாநில செய்திகள்

நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 2 பேர் சிறையில் அடைப்பு

தினத்தந்தி
|
31 July 2022 10:16 PM GMT

நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாநகரம் பொன்மலை பகுதியில் தொடர்ந்து கத்தியை காட்டி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தும் வந்த தங்கமணி என்ற டேன்ஜர் மணி (வயது 35), பிரவீன் (25) ஆகியோர், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டேன், கத்தியை காண்பித்து வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் மீண்டும் நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து பிரவீனுக்கு 342 நாட்களுக்கு சிறை தண்டனையும், தங்கமணி என்ற டேன்ஜர் மணிக்கு 288 நாட்களுக்கு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் 2 பேரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்