< Back
மாநில செய்திகள்
சாலை விபத்தில் 2 பேர் காயம்
கரூர்
மாநில செய்திகள்

சாலை விபத்தில் 2 பேர் காயம்

தினத்தந்தி
|
9 Jan 2023 5:41 PM GMT

சாலை விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சேங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ரகுபதி (வயது 30), சதீஷ்குமார் (30). நண்பர்களான 2 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக சேங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மதுக்கரை சாலையில் சங்கரன்மலைப்பட்டி அருகே சென்றபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்