< Back
மாநில செய்திகள்
சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
26 May 2022 6:50 PM GMT

சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெள்ளியணை

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டசோழபுரம் பகுதி ம.புதுப்பட்டியை சேர்ந்த மலையாளன் (46). இவர் நேற்று முன்தினம் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொய்கைபுத்தூர் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டியை சேர்ந்த ஷேக்பாரீத் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மலையாளனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மலையாளன் மற்றும் ஷேக்பாரித் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மலையாளன் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்