< Back
தமிழக செய்திகள்
கார் மோதி 2 பேர் படுகாயம்
கரூர்
தமிழக செய்திகள்

கார் மோதி 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
20 Dec 2022 12:49 AM IST

கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

புன்னம் சத்திரம் கே.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வி (வயது 21), குளித்தலை ரங்காச்சிபட்டி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (69). இவர்கள் இருவரும் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே தார் சாலை ஓரத்தில் நின்று ெகாண்டிருந்தனா். அப்போது கரூர்-ஆத்தூர் பிரிவு அருள்நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக முத்துசெல்வி, இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் குணசேகரன் மீது வழக்குப்பதிந்து, அந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்