< Back
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் சாவு

தினத்தந்தி
|
2 Sep 2023 6:30 PM GMT

வேப்பந்தட்டை அருகே மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் செத்தன.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியார் (வயது 50), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது செபஸ்தியார் வளர்த்து வந்த 2 மாடுகளும் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தன. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்