< Back
மாநில செய்திகள்
காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது
சேலம்
மாநில செய்திகள்

காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது

தினத்தந்தி
|
10 Sep 2022 8:03 PM GMT

சேலம் சீலநாயக்கன்பட்டியில் காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்னதானப்பட்டி:-

சேலம் அன்னதானப்பட்டி போலீசார் நேற்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாகாராம் (வயது 30), ஆலாம்கான் (28) என்பதும், ஏற்கனவே குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7-ந் தேதி பெங்களூருவில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குட்கா கடத்தி சென்ற போது அவர்கள் வந்த கார், சீலநாயக்கன்பட்டியில் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. மேலும் இவர்கள் பெங்களூருவில் இருந்து தமிழகம் முழுவதும் காரில் குட்கா கடத்தி சென்று கேட்கும் நபர்களுக்கு வினியோகம் செய்து வந்துள்ளனர். இதையடுத்து விபத்துக்குள்ளான அந்த காரையும் பறிமுதல் செய்த போலீசார், காரின் உரிமையாளர் பெங்களூருவில் உள்ளதை அறிந்து அவரையும், அவரது கூட்டாளிகளையும் தேடி அங்கு சென்றுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்