< Back
மாநில செய்திகள்
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
5 Oct 2023 8:11 PM GMT

களக்காடு அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

களக்காடு:

களக்காடு அருகே பெருமாள்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் எட்வர்ட் மகன் ஜெபர்சன் (வயது 18). இவரும், அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுவனும் செல்போனில் விளையாடியுள்ளனர். இதில் சிறுவன் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன், உன்னால் தான் நான் தோல்வியடைந்து விட்டேன் என்று ஜெபர்சனிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறுவன் உள்பட 5 பேர் சேர்ந்து ஜெபர்சனை தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மேலும் சிறுவன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்