< Back
மாநில செய்திகள்
வாலிபர், நண்பருடன் போக்சோ வழக்கில் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வாலிபர், நண்பருடன் 'போக்சோ' வழக்கில் கைது

தினத்தந்தி
|
26 May 2022 8:24 PM GMT

காதலிக்க கூறி பிளஸ்-1 மாணவியை தொந்தரவு செய்த வாலிபர், நண்பருடன் ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம்:-

காதலிக்க கூறி பிளஸ்-1 மாணவியை தொந்தரவு செய்த வாலிபர், நண்பருடன் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மாணவிக்கு தொந்தரவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது21). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

அருண்குமாரின் காதலுக்கு அவருடைய நண்பர் பாலமுருகன் (21) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரும் பிளஸ்-1 மாணவியை காதலிக்க கூறி வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

'போக்சோ' வழக்கு

இதையடுத்து தாயார் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் அருண்குமார், பாலமுருகன் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அருண்குமார், பாலமுருகன் ஆகியோர் மாணவியை காதலிக்க வற்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்