< Back
மாநில செய்திகள்
ரூ.1.80 கோடி கடன் வாங்கி மோசடி
சேலம்
மாநில செய்திகள்

ரூ.1.80 கோடி கடன் வாங்கி மோசடி

தினத்தந்தி
|
14 Jan 2023 7:30 PM GMT

ரூ.1.80 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் தாதுபாய்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவரிடம், கிச்சிப்பாளையம் அம்மையப்பா நகரை சேர்ந்த மேனகா, அவருடைய உறவினர்கள் நீதிமணி, சுசரிக்கா ஆகியோர் தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடியே 80 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்து வந்தனர். பணத்தை திரும்ப கேட்ட போது அவர்கள் பிரகாசை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி நீதிமணி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்