< Back
மாநில செய்திகள்
திருவேற்காடு: போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்..!
சென்னை
மாநில செய்திகள்

திருவேற்காடு: போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்..!

தினத்தந்தி
|
3 Jun 2022 6:08 AM GMT

திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓடிய நிலையில் 8 பேர் திரும்ப வந்தனர்,

பூந்தமல்லி:

சென்னை திருவேற்காடு அடுத்த மேல்அயனம்பாக்கம் பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் வைத்து நடத்தி வருகிறார். இதில் குடிபழக்கம் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் மறு வாழ்வு மையத்தில் இருந்த ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பியோடியவர்களில் 8 பேர் போதை மறுவாழ்வு மையத்திற்க்கு மீண்டும் வந்தனர். மேலும் தப்பியோடிய 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து விட்டு மேலும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களை மையத்தில் சிகிச்சை அளித்தவர்கள் தாக்கியதால் தப்பி சென்றார்களா? அல்லது அவர்கள் அங்கிருந்து சென்றற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்