< Back
மாநில செய்திகள்
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் தங்க நகை கொள்ளை - போலீஸ் விசாரணை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் தங்க நகை கொள்ளை - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
30 May 2022 4:28 AM GMT

சோளிங்கர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்,விவசாயி.இரவு நேரம் தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக இரவு 10 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார்.பின்னர் காலை திரும்பவும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கொண்டபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.கொண்டபாளையம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிராமாக தேடி வருகின்றனர்.

கொள்ளையடித்த நபர் இரண்டு தினங்களாக வீட்டை நோட்டமிட்டதாகவும்,இதன் பின்னரே கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கலாம் என கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும்,இரவு நேரத்தில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்