< Back
மாநில செய்திகள்
போலி நகையை அடகு வைத்து ரூ.15 லட்சம் மோசடி
மதுரை
மாநில செய்திகள்

போலி நகையை அடகு வைத்து ரூ.15 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
1 Aug 2022 8:15 PM GMT

போலி நகையை அடகு வைத்து ரூ.15 லட்சம் மோசடி

மதுரை புட்டுத்தோப்பு மெயின்ரோடு, பொன்னகரம் 4-வது குறுக்கு தெருவில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த கிளையின் மேலாளராக வேலை பார்த்து வருபவர் கார்த்திக்(வயது 27). இவர் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். அதில் அழகரடி 2-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார், எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த இனியன் மனைவி உமாதேவி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் நகையை அடகு வைத்து ரூ.14 லட்சத்து 99 ஆயிரத்து 400 கடனாக பெற்றனர். பின்னர் நாங்கள் அந்த நகைகளை சோதனை செய்து பார்த்தபோது அது குறைந்த அளவு தங்கம் கொண்ட போலி நகை என்பது தெரியவந்தது. எனவே நிறுவனத்தில் போலி நகையை வைத்து பண மோசடியில் ஈடுபட்ட உமாதேவி, செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் கரிமேடு போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்