< Back
மாநில செய்திகள்
15 அடி உயர பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

15 அடி உயர பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
4 Dec 2022 6:36 PM GMT

விழுப்புரம் அருகே 15 அடி உயர பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள ஓட்டேரிப்பாளையம் கிராமத்தில் 15 அடி உயர பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க கடம்புறப்பட்டு சென்று பாலமுருகன் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்