< Back
மாநில செய்திகள்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தினத்தந்தி
|
26 Aug 2022 8:15 AM GMT

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 விதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் முதல் யூனிட்டில் 2-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது யூனிட் 2 அலகுகளில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி தடைசெய்யப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்