< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம்
|23 Jun 2022 5:08 PM GMT
அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை
அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை சம்பளம் வழங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.