< Back
மாநில செய்திகள்
பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி
திருவாரூர்
மாநில செய்திகள்

பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி

தினத்தந்தி
|
7 Sep 2022 6:01 PM GMT

திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

கொள்முதல் நிலையம்

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது.

இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

1,250 டன் அரிசி

அதன்படி திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் பொதுரக அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளுடன் நாமக்கல்லுக்கு புறப்பட்டு சென்றது.

Related Tags :
மேலும் செய்திகள்