< Back
மாநில செய்திகள்
உலக நன்மைக்காக 1,008 திருவிளக்கு பூஜை
சிவகங்கை
மாநில செய்திகள்

உலக நன்மைக்காக 1,008 திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
2 Aug 2022 6:27 PM GMT

சேவுகப்பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் உலக நன்மை வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. இராம அருணகிரி தலைமை தாங்கினார். 1008 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர் மூலவர் சேவுகப்பெருமாள் அய்யனாருக்கும், கோவில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட சிங்கபிடாரி அம்மனுக்கும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வேளார் வம்சாவழி பூஜகர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள், சிங்கம்புணரி நாட்டார்கள், கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்