< Back
மாநில செய்திகள்
ரெயில் மூலம் 1,000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு வந்தது
ஈரோடு
மாநில செய்திகள்

ரெயில் மூலம் 1,000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு வந்தது

தினத்தந்தி
|
17 Sep 2022 10:09 PM GMT

ரெயில் மூலம் 1,000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு வந்தது.

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் இருந்து 1,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயில் மூலம் ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு நேற்று வந்தடைந்தது.

அதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்