< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

தினத்தந்தி
|
9 April 2023 7:00 PM GMT

பெண்ணிடம் 10 பவுன் செயினை மர்மநபர் பறித்து சென்றார்.

சிவகாசி,

சிவகாசி நடராஜாகாலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கிரகலட்சுமி (வயது 49). இவர் சிவகாசி முண்டகன் நாடார் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்களில் வந்த மர்மநபர் ஒருவர் கிரகலட்சுமி கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிரகலட்சுமி சிவகாசி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்