< Back
மாநில செய்திகள்
சூதாடிய 10 பேர் சிக்கினர்
தேனி
மாநில செய்திகள்

சூதாடிய 10 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
25 Jun 2023 7:00 PM GMT

கடமலைக்குண்டு, போடி பகுதிகளில் சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்

கடமலைக்குண்டு போலீசார் மூலக்கடை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மூலக்கடை மயானம் அருகே 4 பேர் கொண்ட ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 39), மனோகரன் (45), பொன்னாங்கன் (39), விஜய் (30) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.400-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் போடி நகர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது போடி சன்னாசிபுரம் செல்லும் பாதையில் ெரயில் தண்டவாளம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், போடியைச் சேர்ந்த நாகராஜன் (54), ரவிச்சந்திரன் (50), செந்தில்குமார் (35), மணிகண்டன் (47), ராஜா (43), மற்றொரு செந்தில்குமார் (47) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்