< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

தினத்தந்தி
|
16 Aug 2022 6:53 PM GMT

கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாப்பாரப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கோவிந்தராஜ் (வயது 34), அப்பு (21), மதன் (30), அஜித் (25) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாபு (45), பாரூக் (37), சாதிக் (54), ஷாஜகான் (35), ரபீக் (53), முருகேஷ் (39) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்