< Back
மாநில செய்திகள்
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
கடலூர்
மாநில செய்திகள்

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தினத்தந்தி
|
14 Dec 2022 7:23 PM GMT

விபத்தில் தையல்காரர் பலியானது தொடர்பாக நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 38), தையல்காரர். இவர் கடந்த 20.2.2018 அன்று மோட்டார் சைக்கிளில் காட்டுக்கூடலூர்-கொள்ளுக்காரன்குட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் ராமச்சந்திரன் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் 1-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த ராமச்சந்திரன் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என கடந்த 19.2.2021 அன்று உத்தரவிட்டார். ஆனால் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்கவில்லை. இதனால் ராமச்சந்திரன் குடும்பத்தினர் கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர்.

அதன்படி விபத்தில் இறந்த ராமச்சந்திரன் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.21 லட்சத்து 18 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் நீதிபதி சுபா அன்புமணி உத்தரவிட்டார். இருப்பினும் இதுவரை நஷ்டஈடு தொகை வழங்கப்படவில்லை. இதனால் கடலூர் பஸ் நிலையத்திற்கு சென்ற கோர்ட்டு ஊழியர்கள், சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

மேலும் செய்திகள்