< Back
மும்பை
பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த முதியவர் திடீர் சாவு
மாவட்ட செய்திகள்
மும்பை

பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த முதியவர் திடீர் சாவு

தினத்தந்தி
|
23 May 2022 4:33 PM GMT

மும்பை ஓட்டலில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மும்பை ஓட்டலில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணுடன் தங்கிய முதியவர்

மும்பை குர்லாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை 61 வயது முதியவர் ஒருவர் 40 வயது பெண்ணுடன் வந்து அறை எடுத்து தங்கினார். காலை 10 மணி அளவில் ஓட்டல் வரவேற்பு அறைக்கு அந்த பெண் அழைப்பு விடுத்து பேசினார். இதில் தன்னுடன் வந்த முதியவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததாக தெரிவித்தார். ஓட்டல் ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தனர். முதியவர் பேச்சுமூச்சின்றி கிடந்ததால் குர்லா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

பலியானது எப்படி?

இதனை தொடர்ந்து முதியவருடன் தங்கி இருந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்த முதியவர் ஒர்லியை சேர்ந்தவர் எனவும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிவித்தார். அந்த முதியவர் தன்னுடன் உல்லாசம் அனுபவித்த போது, மது குடிக்க முயன்றதாகவும், பின்னர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்டமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் விபத்தில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். உயிரிழப்புக்கான உரிய காரணத்தை அறியவும், அவர் ஏதேனும் மாத்திரையை உட்கொண்டாரா? என்பதை அறியவும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றார்.


மேலும் செய்திகள்