< Back
மும்பை
இளம்பெண் கூட்டு பலாத்காரம்- 4 மாற்றுத்திறனாளிகள் கைது
மாவட்ட செய்திகள்
மும்பை

இளம்பெண் கூட்டு பலாத்காரம்- 4 மாற்றுத்திறனாளிகள் கைது

தினத்தந்தி
|
16 Jun 2022 11:57 AM GMT

மும்பையில் மது குடிக்க வைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் மது குடிக்க வைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மது குடிக்க வைத்தனர்

மும்பை சிவாஜிநகரை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணின் உறவினரான மாற்றுத்திறனாளி ஒருவர் குர்லா நேருநகரில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு கண் பார்வை தெரியாது. சம்பவத்தன்று இளம்பெண்ணை நேருநகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இளம்பெண்ணை மது குடிக்க செய்தார்.

அப்போது அங்கு வந்த அவது நண்பர்களான மாற்றுத்திறனாளிகள் ஜர்மான் சேக்(வயது36), மணிபூர் சேக்(44), தாரிக் சேக்(44), மற்றொருவர் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

4 பேர் கைது

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டு பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளிகள் 4 பேரை பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் மற்றொரு மாற்றுத்திறனாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---------

மேலும் செய்திகள்