< Back
மும்பை
மும்பை
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவி சாவு
|30 July 2022 12:34 PM GMT
தந்தையுடன் பள்ளிக்கு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மாணவி உயிரிழந்தார்.
புனே,
புனே மாவட்டம் இந்தபூர் தாலுகா கட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி திருப்தி கதம் (வயது13). நேற்று தனது தந்தையுடன் பள்ளிக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்றாள். அப்போது லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறுமி தவறி சாலையில் விழுந்ததால் லாரியின் அடியில் சிக்கினாள். இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி திருப்தி கதம் பலியானாள்.
இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று பலியான சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.