< Back
மும்பை
டோம்பிவிலியில் மனநலம் பாதித்த மகளை கொலை செய்த தந்தை கைது
மும்பை

டோம்பிவிலியில் மனநலம் பாதித்த மகளை கொலை செய்த தந்தை கைது

தினத்தந்தி
|
25 Sep 2023 7:15 PM GMT

டோம்பிவிலியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்

தானே,

தாேன மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்தவர் மனோஜ் (வயது35). மதுபழக்கத்துக்கு அடிமையான இவர், குடித்துவிட்டு அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். மனோஜிக்கு 4 மகள்கள் இருந்தனர். இவர் சம்பவத்தன்று தனது 14 வயது மூத்த மகள் வேலை பார்க்கும் இடத்துக்கு சென்றார். அவர் வீட்டில் இருந்த லவ்லி என்ற 10 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மகள் இறந்துவிட்டதாக கூறினார். இதைக்கேட்டு சிறுமி வீட்டுக்கு ஓடி சென்றார். அங்கு தனது தங்கை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மனோஜ், மனநலம் பாதித்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்