< Back
மும்பை
கன்னையா லால் கொலை குறித்து கருத்து: - மும்பை சிறுமிக்கு கொலை மிரட்டல்
மும்பை

கன்னையா லால் கொலை குறித்து கருத்து: - மும்பை சிறுமிக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
6 July 2022 5:21 PM GMT

கன்னையா லால் கொலை குறித்து கருத்து தெரிவித்த மும்பை சிறுமிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

மும்பை,

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல் கடைக்காரர் கடந்த 28-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அமராவதி நகரில் மருந்து கடைக்காரர் இதே காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கன்னையா லால் படுகொலை சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்ட தெற்கு மும்பையில் உள்ள கிர்காவ் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. சமீபத்தில் இவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து பெற்றோர் உதவியுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவரது புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்