< Back
மும்பை
பெண்ணிடம் ரூ.2.6 லட்சம் மோசடி செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு
மும்பை

பெண்ணிடம் ரூ.2.6 லட்சம் மோசடி செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
18 July 2022 5:23 PM GMT

ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.2.6 லட்சம் மோசடி செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை அந்தேரி பகுதியை சோ்ந்த 38 வயது பெண் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடி வந்தார். இவருக்கு 2020-ம் ஆண்டு திருமண தகவல் மையம் மூலம் துபாயை சேர்ந்த டாக்டர் என கூறிக்கொண்டு அமுதன் மாணிக்கம் என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் திருமணம் செய்வது தொடர்பாக பேசி வந்தனர். இந்தநிலையில் அமுதன் மாணிக்கம் அவருக்கு அவசரமாக ரூ.2.6 லட்சம் தேவைப்படுவதாக கூறினார். இதையடுத்து 38 வயது பெண் அவருக்கு பணம் கொடுத்தார்.

இந்தநிலையில் பெண்ணுக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டது. எனவே அவர் அமுதன் மாணிக்கத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து அந்தேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அமுதன் மாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்