< Back
மும்பை
இறந்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.28 லட்சம் மோசடி
மும்பை

இறந்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.28 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
11 April 2023 6:45 PM GMT

இறந்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.28 லட்சம் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

தானேயை சேர்ந்த ஒருவரின் மகன் 2021-ம் ஆண்டு செப்டம்பரில் உயிரிழந்தார். இறந்தவருக்கு தானேயில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு இருந்தது. இந்தநிலையில் தந்தை தனது மகன் உயிரிழந்த தகவலை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனியார் வங்கியிடம் தெரிவித்தார். சமீபத்தில் அவர் மகனின் வங்கி கணக்கு பணப்பரிவா்த்தனை விவரங்களை ஆய்வு செய்தார். அப்போது உயிரிழந்த மகனின் வங்கி கணக்கில் இருந்து 2021-ம் ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ரூ.28.3 லட்சம் மர்ம நபர்களால் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.28.3 லட்சம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்