மாவட்ட செய்திகள்
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல்
|சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
புனே,
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
9 வயது சிறுமி
புனே அருகே ஜூஜூரி பகுதியை சேர்ந்தவர் பவன்ராஜ் (வயது24). கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி 9 வயது சிறுமியிடம் ரூ.10-ஐ கொடுத்து சாக்லேட் வாங்கி வரும்படி தெரிவித்தார்.
இதன்படி சிறுமி கடைக்கு சென்று சாக்லேட் வாங்கி விட்டு பவன்ராஜ் வீட்டிற்கு வந்தாள். அப்போது சிறுமியிடம் ஆபாச வீடியோவை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாள். பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
20 ஆண்டு கடுங்காவல்
இந்த புகாரின் படி போலீசார் வாலிபர் பவன்ராஜை கைது செய்தனர். மேலும் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது.
இதனை தொடர்ந்து பவன்ராஜிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.