< Back
பெங்களூரு
பெங்களூரு
மாதேஸ்வரன் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை
|3 Sep 2022 5:27 PM GMT
இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மாதேஸ்வரன் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகரில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 209-ல் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மாதேஸ்வரா மலை பகுதியில் உள்ள சாலையிலும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இருமாநிலத்திற்கு இடையேயான அதியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாதேஸ்வரன் மலைப்பாதையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் செல்ல எந்த தடையும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.