< Back
பெங்களூரு
போதைப்பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் கைது
பெங்களூரு

போதைப்பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
12 Jun 2022 2:53 PM GMT

பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற நைஜீரிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாா்கள். அப்போது பஞ்சாரா லே-அவுட் பகுதியில் உள்ள ஏரி முன்பாக சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்திய போது போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் நைஜீரியாவை சேர்ந்த ஜான் ஒகாபார் (வயது 35) என்று தெரிந்தது. இவர், பஞ்சாரா லே-அவுட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரிந்தது.

நைஜீரியாவை சேர்ந்த கும்பலிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி, அவற்றை கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஜான் விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 32 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், ஒரு விலை உயர்ந்த செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான ஜான் மீது ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்