< Back
பெங்களூரு
பத்ராவதி தாலுகாவில் சம்பவம்:  மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
பெங்களூரு

பத்ராவதி தாலுகாவில் சம்பவம்: மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
12 Aug 2022 4:54 PM GMT

\சிவமொக்கா பத்ராவதியில் மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிவமொக்கா:

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). இவரும் அதே பகுதியில் வசித்து வரும் மைனர் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் பிரகாசை கண்டித்தனர். மேலும், மைனர் பெண்ணிடம் காதலை கைவிடுமாறு கூறினர். ஆனால் அதற்கு மைனர் பெண் மறுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) பிரகாஷ் யாருக்கும் தெரியாமல் மைனர் பெண்ணை வெளியூருக்கு அழைத்து சென்றார்.

பின்னர், கடந்த வாரம் மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். இதற்கிடையே மகள் கடத்தப்பட்டதாக பெண்ணின் பெற்றோா் போலீசில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் பிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மீட்கப்பட்ட மைனர் பெண், காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

மேலும் செய்திகள்