< Back
பெங்களூரு
மழைப்பொழிவு குறைந்ததால்  கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
பெங்களூரு

மழைப்பொழிவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

தினத்தந்தி
|
10 Sep 2022 5:46 PM GMT

மழைப்பொழிவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்துள்ளது.

மைசூரு:

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்துள்ளது.

அதன்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 124.15 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17,247 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 13,136 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,283.15 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,816 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 27,816 கனஅடி தண்ணீர் வெளியேறி அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.

மேலும் செய்திகள்