< Back
பெங்களூரு
கணவருடன் தகராறு; பெண் தற்கொலை
பெங்களூரு

கணவருடன் தகராறு; பெண் தற்கொலை

தினத்தந்தி
|
27 May 2022 2:47 PM GMT

பெங்களூருவில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ராமயனபாளையாவை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மனைவி சந்தனா. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சந்தனாவின் சொந்த ஊர் தொட்டபள்ளாப்புரா அருகே சித்த நாயக்கனஹள்ளி ஆகும். அங்கு நடந்த திருவிழாவை பார்க்க சந்தனா தனது கணவர், குழந்தையுடன் சென்றிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருவிழாவுக்கு வந்து 3 நாட்கள் தங்கி இருந்த சந்தனாவை வீட்டுக்கு செல்லலாம் என்று நாகேஷ் அழைத்ததாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்